இன்றைய குறள்

Friday, January 26, 2018

நீர் கோலம்

தூரிகை காதல்...
நீரிலும் வட்ட ஓவியம் தீட்டிய கல்,
ஓவியம் நிரந்திரமாய் இராது
என்று தெரிந்தவுடன்
மூழ்கி தற்கொலை
செய்துகொண்டது!!
----------------------------------------------------
ஓவியத்தின் பித்து...
வரைந்த தூரிகை மூழ்கியதால்
தன்னை அழித்துக்கொண்டது
வட்ட ஓவியம்!!
----------------------------------------------------
ஆக்கமும் அழிவும்...
கண் இமைக்கும் நொடியில்,
தண்ணீர் மேல் வட்ட கோலமும்
வரைந்த கல்லின் மரணமும்!!
----------------------------------------------------
மைய முள்ளியில் அரங்கேறிய
ஜனனமும் மரணமும்.
----------------------------------------------------
அழகான கோலம் பிறக்க,
ஆதாரமாண கல் இறக்க,
அமைதியாய் நீர்!!!
எம் கண்களுக்குள்
ஊடுருவிய நிகழ்வு

No comments:

Post a Comment

பழமொழி