இன்றைய குறள்

Wednesday, July 23, 2014

இறுதி வரை


வண்ணத்தை தூரிகையில் தோய்த்து
உன்னை வரைய ஓவியன் இல்லை நான்

வார்த்தைகளை கோர்த்து
உன்னை பற்றி கவிதை வடிக்க கவிஞன் இல்லை நான்

புகழ்ந்து பேசி கவர
உன்னை கவர பேச்சாளர் இல்லை நான்

வித்தைகளை காட்டி
உன்னை ஈர்க்க வித்தகன் இல்லை நான்

காலம் முழுவதும்
உன்னை மட்டும் காதலித்து
உனக்காக வாழ்ந்து
மடியவிரும்பும்
காதலான மாறிய
உன் கணவன்
நான்.......................

1 comment:

  1. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி தோழரே. ஆனால் பணி நிமித்தமாக தொடர்ந்து பதிவுகள் இணைக்க முடியா நிலையில் உள்ளேன்.

    ReplyDelete

பழமொழி