இன்றைய குறள்

Monday, July 30, 2012

சங்கே முழங்கு பாடல் வரிகள்


பாவேந்தர் பாரதிதாசனின் சங்கே முழங்கு கவிதை திரைப்பட பாடலாக:-



சங்கே முழங்கு சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு சங்கே முழங்கு
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்
மங்குல் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
தமிழுடன் பிறந்தோம் நாங்கள்
ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய் முழங்கு சங்கே

சங்கே முழங்கு ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ

வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோள் எங்கள்
வெற்றித் தோள்கள் ஆஆஆஆஆஆஆஆஆஆ
கங்கையைப் போல் காவிரி போல்
கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்
வெங்குருதி தனில்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற
தமிழ் எங்கள் மூச்சாம் தமிழ் எங்கள் மூச்சாம்

6 comments:

  1. தமிழனின் எழுச்சி. உணர்வைக் காட்டும் வளர்நிலை.பாரதிதாசனின் பாடல் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் தோழரே....

    ReplyDelete
  3. பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

    ReplyDelete
  4. உணர்வுமிக்க பாடல், பாவேந்தரின் தமிழ் பற்றுக்கு நிகரில்லை

    ReplyDelete
  5. உணர்வுமிக்க பாடல், பாவேந்தரின் தமிழ் பற்றுக்கு நிகரில்லை

    ReplyDelete
  6. தமிழினத்தின் வீரத்தையும், பெருமையையும் பறைசாற்றும் மிக உன்னதமான பாடல்.

    ReplyDelete

பழமொழி